Tuesday, August 25

கடவுளுக்கு ஒரு கடிதம்

 

முறையான முகவரி இல்லையென

 அஞ்சல் செய்யாத கடிதமாய் 

திரும்பி வருகின்றன - உனக்கென

 நானெழுதும் ஒவ்வொரு கடிதமும்.. 


 அண்டமெல்லாம் நிறைந்த

 ஆண்டவனுக்கு முறையான 

முகவரி இல்லையா? 

முறையிடவும் கண்ணில்

 தெரிவதில்லை நீயெனக்கு....


 கண்மூடி வேண்டியவளுக்குப் 

புரிந்தது கடவுள் என்பார் 

அண்டத்தில் இல்லை

 இக்கண்டத்திலும் இல்லை.. 

இம்மனம் *கட*ந்து *உள்*

 இருக்கிறானென்று... 

 இனி எழுதுகிறேன் 

எழுத்தில்லா சொல்லில்லா 

எழுதுகோல் இல்லா 

எண்ணங்களால் ஒரு கடிதம் - நல்

 எண்ணங்களால் ஒரு கடிதம் 

*கடவுளுக்கு ஒரு கடிதம்*

No comments:

Post a Comment