Wednesday, August 26

நிரபராதிகளின் நரகம்

 நிரபராதிகளுக்கென்றும் 

குற்றவாளிகளுக்கென்றும் 

தனியே நரகம் உண்டா? 


அத்துணை நல்லவர்களா நாம்?

 எவரோ செய்த தவறுக்கு 

எவர் மாட்டுவார் எனக் 

காத்திருக்கும் கூட்டமல்லவா நாம்?


 பிறர் பற்றிய பொய்ச்செய்தியை

 தீயாய் பரப்பி வாயால் 

வடைசுடுபவர் தாமே நாம்?


 ஆனாலும்.... 'தேரா மன்னா' 

என்று விளித்து

 உண்மை உரைத்தவுடன் 

உயிர்நீத்த மரபு நம்மரபு.


 நிரபராதிகளுக்கு நரகம் 

என்றொன்று தனியே வேண்டா. 

பிறரின் இழிபார்வையே நரகம்..

பிறரின் இழிசொல்லே நரகம்..


No comments:

Post a Comment