Thursday, August 27

பொருள் தேடி....


 

என்கையிலுள்ள கோலுக்கும்
பொருள் இல்லை.
உன்கழுத்திலுள்ள சங்கிலிக்கும்
பொருள் இல்லை.
நம்வாழ்வு நல்வாழ்வாகவும்
பொருள் இல்லை.

பொருள் தேடியே போகிறது
ஒவ்வொரு நாளும்..
என்றோ ஒருநாள்
குட்டிக் குழந்தை
கைக்கொட்டி சிரிக்கும்..
அந்நாள்தவிர
எல்லாநாளும்
பொருளற்றதாகவே ஆகிறது.

குழந்தை அறியுமோ
வாழ்விற்கு பொருள் தேவை என்பதை.!
நாம் அறிவோமா
வாழ்விற்கு பொருள் மட்டும்
தேவையில்லை எனபதை.!!

No comments:

Post a Comment