Thursday, August 20

வானவில்லிடம் கோரிக்கை


வானில் தோன்றும் உன்னை

விணணவர் எவரும் வியப்பதில்லை.

மண்ணவர்தான் கண்ணகன்று...

 

வாய்பிளந்து காண்பதில்

வயதொன்றும் தெரிவதில்லை.

குழந்தை முதல் கிழவிவரை..

 

ஓரிரு மணித்துளிகள்தான்

உன்காட்சி - ஆனால்

ஓராறு மணிநேரம்

உன்னைப் பற்றியே பேச்சு.

 

வடிவம் வட்டம் என்பார்கள்.

வில்லென்று பேர்வாங்கி

விண்ணிற்கு அழகானாய்.

 

உன்னழகைக் காணச் சொன்னால்

உயிருள்ளவரை காணலாம்.

எழுதச் சொன்னால் அத்தனை

எழுத்திற்கு எங்கு போவேன் நான்??

 

எப்போதும்

நீ தோன்றும் நேரத்தில்

நீ மட்டுமே நாயகி

நீ மட்டுமே அரசி.

 

இப்போதும்

முன்னிற்கும் பட்டமரம் தாண்டி

ஈர்க்கிறாய் .

பச்சை மரங்கள் தாண்டி

கவர்கிறாய்.

 

மீண்டும் தோன்றும் போது

முன்னரே சொல்லியனுப்பு..

வாயில் திறப்பதற்குள்

முடிந்து விடுகிறாய்.

 

காணாத ஏக்கம் என்னுள் வைத்து

கண்டவர்கள்மேல் அழுக்காறு கொண்டு.

தேவைதானா நமக்கு!

 

இனி

மீண்டும் தோன்றும் போது

முன்னரே சொல்லியனுப்பு!!


No comments:

Post a Comment