Tuesday, August 25

நம்பிக்கைதானே எல்லாம்

வீழ்ந்தவர்க்கு நீளும் கரமும்
எழுந்தவர்க்கு இழுக்கும் கரமும்
*நம்பிக்கை தானே எல்லாம் ...*

துவண்டவர்க்கு ஆற்று மொழியும்
உவந்தோர்க்கு வாழ்த் தொலியும்
*நம்பிக்கை தானே எல்லாம் ...*

ஒருதுளி நஞ்சால் போகும் உயிரை
ஒருசொல் நிறுத்தி வைக்குமே
*நம்பிக்கை தானே எல்லாம்..*

நம்பியவர் கைவிட
நயனங்கள் கண்ணீர்விட
வாழ்வில்லை என்பார்க்கு
வாய்ச்சொல்கூட வேண்டாம்
நம் புன்னகை போதும்
*நம்பிக்கை தானே எல்லாம்..*.

நாளை நமதாவது இருக்கட்டும்
இன்றை நமதாக்குவோம் முதலில்
பறந்து செல்லும் புறாக்கள் சொல்லட்டும்
இன்று புதிதாய் பிறந்தோம் என்று.
*நம்பிக்கை தானே எல்லாம்..*

No comments:

Post a Comment